போராட்டம் நடத்திய சாம்சங் தொழிலாளர்கள் கைது!
காஞ்சிபுரம்: சாம்சங் தொழிற்சாலை விவகாரத்தில் போராடி வரும் தொழிலாளர்களை போலீசார் கைது செய்ய முயன்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் 2 பேர் மயக்கம் அடைந்தனர்.
@1brகாஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ளது சாம்சங் தொழிற்சாலை. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். முறையான ஊதிய உயர்வு, 8 மணிநேரம் வேலை, தொழிற்சங்க உரிமை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., சங்கத்தினர் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தனர்.
போராட்டம் தொடர்ந்த நிலையில், அரசுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது. இரு தரப்புக்கும் இடையே பேச்சு நடத்தி தீர்வு காணும்படி அமைச்சர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி தொழில் துறை அமைச்சர் ராஜா உள்ளிட்டோர் முன்னிலையில் பேச்சு நடத்தப்பட்டது.
இதில் நிறுவனத்திற்கும், தொழிலாளர்களில் ஒரு பிரிவினருக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் ராஜா வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால் அதை பொருட்படுத்தாத சி.ஐ.டி.யு., சங்கத்தினர், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்த அரசு நிர்வாகம், நேற்று இரவோடு இரவாக போராட்ட இடத்தில் அமைக்கப்பட்டு இருந்த பந்தலை போலீசார் மூலம் அகற்றியது. தொழிலாளர்களின் வீடுகளுக்கு சென்று முக்கிய நிர்வாகிகளையும் கைது செய்தனர்.
இந்நிலையில் இன்று போராட்ட களத்துக்கு வந்த தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தனர். அங்கு வந்த போலீசார், 'இப்படி கூடுவது சட்டவிரோதம், கலைந்து செல்லுங்கள்' என்று கூறினர். அதை ஏற்காமல் போராட்டத்தை அவர்கள் தொடர்ந்ததால் போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர்.
அப்போது இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு, வாக்குவாதமும் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட குழப்பத்தில் தொழிலாளர்கள் மணிமாறன், தயாநிதி என்ற இருவர் போராட்ட களத்திலேயே மயங்கினர்.
சக தொழிலாளர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். போராட்ட களத்தில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
சி.ஐ.டி.யு., தொழிற்சங்க தலைவர் சவுந்திரராஜன் கூறுகையில், ''போலீசார் இவ்வளவு அக்கிரமமாக நடந்து கொள்வது ஆட்சிக்கு நல்லதல்ல,'' என்றார்.
வாசகர் கருத்து (13)
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
09 அக்,2024 - 15:39 Report Abuse
கம்யூனிஸ்டுகளின் குதத்தில் இரும்பு கம்பிகள் , வலுவான போலீஸ் லாட்டிகளை விட்டு குடைந்து சுழற்றினால் , தொழிற்சங்கம், யூனியன் , ஸ்ட்ரைக் என எதுவும் இருக்காது ....செங்கொடி டோலர்களை நடுத்தெருவில் நாயை அடிப்பதுபோல அடித்து பெண்டாட்டி பிள்ளை பார்க்க கதற வைத்தால் , இந்த யூனியன் பிழைப்புக்கு வரமாட்டான் .....
0
0
Reply
kalyanasundaram - ottawa,இந்தியா
09 அக்,2024 - 15:20 Report Abuse
This factory will shift to Andhra very shortly. Most will loose jobs.
0
0
Reply
மொட்டை தாசன்... - Port Louis,இந்தியா
09 அக்,2024 - 15:07 Report Abuse
கேரளாவையும் மேற்கு வங்காளத்தையும் பார்த்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள் தோழர்களே . தொழிற்சாலை மூடிவிட்டால் தொழிலார்களின் நிலைமை மோசமாகிவிடும் ஆனால் தொழிற்சங்க நிர்வாகிகள் வேறு தொழிற்சாலையில் அவர்களின் கொடிகளை நட்டு பிழைத்துக்கொள்வார்கள் .
0
0
Reply
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
09 அக்,2024 - 14:38 Report Abuse
கம்யூனிஸ்ட் சங்கங்கள் இந்த மாதிரி தொழிற்சாலைகளில் தொடங்க அனுமதி கிடையாது என்பது ஆலை தொடங்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் அங்கே வேலைக்கு சேறும் போது அப்பாயிண்ட்மெண்ட் காண்ட்ராக்டிலும் இருக்கும்... இதையும் மீறி சில புல்லுறுவிகளை வச்சி கம்யூனிஸ்ட் பழம் பெருச்சாளிகள் செய்யும் வேலை இது. மேலே வளரவிடாமல் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கனும். சாம்சங் மாதிரி நிறுவனங்கள் என்றும் ஊழியர்கள் நலனில் குறை வைக்க வாய்ப்பில்லை... ஒழுங்கா வேலைக்கு திரும்பலன்னா கம்பெனி மூடிடுவானுவ... கம்யூனிஸ்ட் கூட சேர்ந்து உண்டி வசூல் பண்ணனும்... பார்த்து நடந்துக்கங்க மக்கா...
0
0
Reply
Palanisamy Sekar - Jurong-West,இந்தியா
09 அக்,2024 - 14:06 Report Abuse
ஐயோ சி ஐ டி யூ சவுந்திரராஜன் தலைமையில் என்றால் அந்த நிறுவனம் வேறு வழியில்லாமல் வேறு மாநிலத்திற்கு சென்றுவிடும் என்பது சாத்தியமான உண்மை.
0
0
Reply
ArGu - Chennai,இந்தியா
09 அக்,2024 - 13:46 Report Abuse
உருப்பட விடமாட்டான் உண்டிக்குலுக்கி புத்தி இருந்தா பொழச்சிக்கோ இல்லனா நாசமா போ
0
0
Reply
சாண்டில்யன் - Paris,இந்தியா
09 அக்,2024 - 13:46 Report Abuse
சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் போராட்டம் கவலை அளிப்பதாய் உள்ளது தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள் என்று வெளிநாடுகளில் எல்லாம் ஊர் ஊராகப்போய் தொங்கிக் கொண்டிருக்கிறோம் அதிலும் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ள நிறுவனங்களாக பார்க்கிறோம் இந்த நிலையில் மாநிலங்களுக்கு இடையே மட்டுமல்ல இந்த மாநிலத்துக்கு போட்டியாக மத்திய அரசே உள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இந்த நிலவரங்களை எண்ணிப் பார்ப்பதுடன் சம்பந்தப் பட்ட தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தையும் எண்ணிப் பார்த்து தங்கள் முன்னேற்றைத்தில் கவனம் கொள்ள வேண்டும் சம்பந்தப் பட்டவர்கள் நல்ல முடிவெடுக்க வேண்டும். தூண்டிவிடும் எதிரிக் கட்சிகள் வேலை போட்டு தருவார்களா? நாட்டில் வேலை என்ன விலை? ஐம்பது ஆண்டுகளுக்குமுன் நானும் தொழிற்சங்க தலைவனாக தொடர்ந்து ஏழு ஆண்டுகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டு தொழிலாளர் நலனுக்காக இரண்டுமுறை ரயில் மறியல் செய்து வெற்றி கண்டவன்தான். அதனாலேயே எனக்கு பதினெட்டாண்டுகள் பதவி உயர்வே மறுக்கப் பட்டது.
0
0
அருணாசலம் - ,
09 அக்,2024 - 14:43Report Abuse
ரயில் மறியலா? எப்படி கட்டுமரம் போலவா?
0
0
Reply
... - ,
09 அக்,2024 - 13:19 Report Abuse
இப்படித்தானே ஸ்டெர்லைட் டையும் மூடினர்.அதற்கு திமுகவும் உடந்தை தானே.இப்போ ரிவன்ஜ் எடுக்குது
0
0
Reply
Rasheel - Connecticut,இந்தியா
09 அக்,2024 - 13:17 Report Abuse
கேரளாவையும் மேற்கு வங்காளத்தையும் பார்த்து பாடம் கற்று கொண்டால் நல்லது. தொழில் சாலையை மூடினால் சாப்பாடு??
0
0
Reply
Sankare Eswar - tuas,இந்தியா
09 அக்,2024 - 13:12 Report Abuse
திராவிட திருட்டு சமரச மீட்டிங்... தீய முயூட்டல் கழக அடிமைகள் சிலரை அழைத்து பேசி முழு பூசணிக்காயை சோற்றை மறைக்கும் இந்த கேடு கேட்ட மக்கள் விரோத கேவல அரசு
0
0
Reply
மேலும் 2 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement