போலீஸ் முன்னிலையில் பா.ஜ., எம்.எல்.ஏ., கன்னத்தில் ‛பளார்' விட்ட வழக்கறிஞர் :

8

லக்னோ: உ.பி.யில் போலீஸ் முன்னிலையில் பா.ஜ., எம்.எல்.ஏ., கன்னத்தில் வழக்கறிஞர் ஒருவர் ‛பளார்' விடும் வீடியோ இணையதளங்களில் வைரலாகிவருகிறது.

உ.பி. மாநிலம் லக்மிபூர் கெர்ரி மாவட்ட கூட்டுறவு வங்கி நிர்வாகிகள் தேர்தல் வரும் 11-ம் தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அத்தொகுதி ஆளும் பா.ஜ., எம்.எல்.ஏ.,வான யோகேஷ் வர்மாவுக்கும், உள்ளூர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவரான அவ்தேஷ் சிங் என்ற வழக்கறிஞருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.


இது தொடர்பாக இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பிலும் வரவழைக்கப்பட்டனர். அப்போது எம்.எல்.ஏ., யோகேஷ் வர்மா தனது ஆதராவளர்களுடன் வந்து கொண்டிருந்தார். எதிரே வழக்கறிஞர் அவ்தேஷ் சிங், போலீசாருடன் வந்து கொண்டிருந்தார்.

திடீரென எம்.எல்.ஏ.,கன்னத்தில் ‛பளார்'விட்டார் வழக்கறிஞர் அவ்தேஷ் சிங். இருவரும் போலீஸ் முன்னிலையில் ஒருவரையொருவர் தாக்கிகொண்டனர். உடன் அங்கிருந்த போலீசார் இருவரையும் விலக்கிவிட்டனர். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

Advertisement