பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க விழிப்புணர்வு


பாதுகாப்பாக பட்டாசு
வெடிக்க விழிப்புணர்வு
ஆத்துார், அக். 10-
ஆத்துார் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் அசோகன் தலைமையில் வீரர்கள் நேற்று, தீபாவளி பண்டிகையின்போது பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குறிப்பாக ஆத்துார் நகராட்சி அலுவலகம், வணிக வளாக கடைகள், அரசு, தனியார் அலுவலகம், பள்ளி பகுதிகளில் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது பட்டாசு வெடிக்கும் வழிமுறை குறித்து எடுத்துரைத்தனர். அதேபோல் கெங்கவல்லி தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

Advertisement