எஸ்.டி., ஈடன் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

சேத்தியாத்தோப்பு: சென்னையில் நடந்த விளையாட்டு போட்டிகளில் வென்ற எஸ்.டி., ஈடன் பள்ளி மாணவர்களுக்கு, பள்ளியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் சேத்தியாத்தோப்பு, வடலுார் எஸ்.டி., ஈடன் பள்ளி மாணவர்கள் பங்கேற்று விளையாடினர். குண்டு எரிதல் போட்டியில் தருண்குமார், கமலேஷ், ரகுராம்சஞ்சய் ஆகியோரும், நீளம் தாண்டுதலில் மாணவிகள் தமிழரசி, யாஷினி, திவ்யதர்ஷினி, அபிநயா, மாணவர்கள் ஜெகன், நந்தா, நித்தீஷ், சிலம்பத்தில் மாணவர் அஜய் ஆகியோர் வென்றனர்.

போட்டிகளில் வென்றவர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சி விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தலைமையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் ஆகியோர் பாராட்டி சான்று பதங்கங்கள் வழங்கினர்.

பாராட்டு சான்று பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை எஸ்.டி., ஈடன் பள்ளி முதல்வர் சுகிர்தா தாமஸ், நிர்வாக இயக்குனர் தீபக்தாமஸ் ஆகியோர் பாராட்டினர்.

உடற்கல்வி ஆசிரியர் மற்றும் சிலம்பம் ஆசிரியர் தர்மன் நன்றி கூறினார்.

Advertisement