மாற்றுத்திறன் மாணவி தடகளத்தில் சாதனை
பெண்ணாடம்: முதல்வர் கோப்பைக்கான ஓட்டப்பந்தயத்தில் மாற்றுத்திறனாளி மாணவி மாவட்ட அளவில் முதலிடம் பெற்று அசத்தி உள்ளார்.
முதல்வர் கோப்பைக்கான, பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிகள், கடந்த மாதம் 13ம் தேதி, கடலுார் அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்தது. 20ம் தேதி நடந்த மாற்றுத்திறனாளி பிரிவுக்கான ஓட்டத்தில் மாவட்ட அளவில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அதில், பெண்ணாடம் அடுத்த இறையூர் அருணா உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி சார்பில் பங்கேற்ற ஏழாம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவி ஸ்ரீநிஜா, 100 மீட்டர் ஓட்டத்தில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று, அசத்தி உள்ளார். மாணவியை ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement