குள்ளஞ்சாவடியில் கபடி போட்டி

குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அடுத்த வழுதலம்பட்டு கிராமத்தில், நியூ பேச்சுலர்ஸ் கபடி குழு, வழுதலம்பட்டு கிரிக்கெட் குழு மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில் இரண்டு நாட்கள் கபடி போட்டிகள் நடத்தப்பட்டது. அம்பேத்கர் திடலில் நடந்த போட்டியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிராம அணிகள் பங்கேற்று விளையாடியது.

இதில், வழுதலம்பட்டு கபடி குழு முதல் இடம் பிடித்து, சிறப்பு பரிசுகளை பெற்றது. இரண்டாம் பரிசு நவநீதம் நகர், மூன்றாம் பரிசு கீழக்கொல்லை அணி, 4ம் பரிசை வழுதலம்பட்டு மற்றொரு அணி, 5ம் பரிசை காட்டுமன்னார்குடி, 6ம் பரிசை கீழ்பூவாணிக்குப்பம் அணி பெற்றது.

வெற்றி பெற்றவர்களுக்கு தி.மு.க., குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் சிவக்குமார், ஊராட்சி தலைவர் கலைச்செல்வி ராஜேந்திரன் சார்பில் பரிசு தொகை வழங்கப்பட்டது. முதலிடம் பெற்ற வழுதலம்பட்டு கபடி அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது.

Advertisement