வடிகால் வாய்க்காலை துார்வார வேண்டுகோள்


வடிகால் வாய்க்காலை
துார்வார வேண்டுகோள்
கிருஷ்ணராயபுரம், அக். 10-
மேல மாயனுார் பகுதியில், வடிகால் வாய்க்கால் மோசமாக இருப்பதால் வடிநீர் வடிவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த மேல மாயனுார், கட்டளை, ரெங்காநாதபுரம் ஆகிய பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களுக்கு, அமராவதி பாசன வாய்க்கால் மூலம் தண்ணீர் கிடைக்கிறது. தற்போது மேல மாயனுார் வடிகால் வாய்க்கால் துார் வாராததால் வாய்க்காலில் முள் செடிகள், ஆகாயத்தாமரை வளர்ந்து புதராக உள்ளது. இதனால் வடிகால் வாய்க்காலில் சரி வர தண்ணீர் செல்லாமல் பல இடங்களில் தேங்கி வருகிறது.மழை நீர் செல்ல வழி இல்லாததால், அருகில் உள்ள விவசாய நிலங்களில் மழை நீர் புகுந்து விடுகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். வடிகால் வாய்க்காலை, பொக்லைன் இயந்திரம் கொண்டு துார் வாருவதற்கான நடவடிக்கையை, நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement