பென்காக் சிலாட் வீரர்கள் உஸ்பெகிஸ்தான் பயணம்

பாகூர்: ஆசியா அளவிலான பென்காக் சிலாட் போட்டியில், இந்திய அணி சார்பில் பங்கேற்கும், புதுச்சேரி வீரர்கள், உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

ஆசியா அளவிலான 8வது பென்காக் சிலாட் போட்டி, இன்று (10ம் தேதி) துவங்கி வரும் 16ம் தேதி வரை, உஸ்பெகிஸ்தான் நாட்டில் புக்காரா நகரத்தில் நடைபெற உள்ளது. ஜூடோ, மல்யுத்தம், பாக்ஸிங், கிக் பாக்ஸிங், டேக்வாண்டோ போட்டிகளின் கலவையாக கொண்ட இந்த பென்காக் சிலாட் விளையாட்டு போட்டியில், இந்திய அணி சார்பில் புதுச்சேரி வீரர்கள் பிரேம் குமார், பிரவின்குமார், மணிகண்டன், ஹேமா, காவியா, ஜூவிதா, ரஞ்ஜனி, பரமேஸ்வரி, பிரித்தீ ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இவர்களுடன், இந்திய பென்காக் சிலாட் கூட்டமைப்பின் சார்பில், இந்திய அணியின் மேலாளராக புதுச்சேரியை சேர்ந்த அருள்ஜோதி பங்கேற்ற உள்ளார்.

இவர்களை வாழ்த்தி வழினுப்பும் நிகழ்ச்சி பாகூரில் நடைபெற்றது. செந்தில்குமார் எம்.எல்.ஏ., பங்கேற்று உஸ்பெகிஸ்தான் புறப்பட்ட வீரர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

புதுச்சேரி அமெச்சூர் பென்காக் சிலாட் அசோசியேஷன் தலைவர் சாந்தி லட்சுமி, பொதுச் செயலாளர் பச்சையப்பன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisement