பெண்ணுடன் தொடர்பால் பரோட்டா மாஸ்டர் கொலை

எட்டையபுரம்:துாத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அருகே தாப்பாத்தி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் கண்ணன், 46, எப்போதும்வென்றான் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்தார்.

சில நாட்களாக காட்டுநாயக்கன்பட்டியில், வாடகை வீட்டில் இவர் வசித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது, கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, எப்போதும்வென்றான் போலீசார் காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாதவன், 25, என்பவரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

கொலை செய்யப்பட்டவருக்கும், காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணுடன் ஏற்கனவே மாதவன் நெருங்கிப் பழகி வந்தார். இதுதொடர்பாக கண்ணனுக்கும், மாதவனுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. நேற்று முன்தினம் கண்ணனின் வீட்டிற்கு சென்ற மாதவன், அவரை குத்திக் கொலை செய்தார். தடுக்க முயன்ற அந்த பெண்ணுக்கும் கையில் கத்திக்குத்து விழுந்தது. கைதான மாதவனிடம் தொடர்ந்து விசாரிக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement