தனியார் நிறுவன ஊழியர் உட்பட நால்வர் மாயம்

தனியார் நிறுவன ஊழியர்
உட்பட நால்வர் மாயம்
கிருஷ்ணகிரி, அக். 10-
ஊத்தங்கரை அடுத்த நரசம்பட்டியை சேர்ந்தவர் கவிதா 43. இவரது கணவர் நாச்சியப்பன், 52. இவர், பெங்களூரு தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிகிறார்.
கடந்த, 2ல், நரசம்பட்டிக்கு வந்துள்ளார். அப்போது தம்பதியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நாச்சியப்பன் கடந்த, 4ல், மீண்டும் பெங்களூரு சென்றார். அதன்பின் வீட்டிலிருந்து கவிதா, 43, அவரது தந்தை காளியப்பன், 65 இருவரும் வெளியே சென்றவர்கள், மீண்டும் வீடு திரும்பவில்லை. அது குறித்து நாச்சிமுத்து நேற்று முன்தினம் அளித்த புகார் படி, சிங்காரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
போச்சம்பள்ளி அடுத்த வடமலம்பட்டியை சேர்ந்தவர் சஞ்சய், 20, விவசாயி. கடந்த, 3ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாய் நேற்று முன்தினம் அளித்த புகார் படி, போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
கெலமங்கலம் அடுத்த பி.செட்டிப்பள்ளியை சேர்ந்தவர் சுமிதா, 19, அஞ்செட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். கடந்த, 7 மாலை வீட்டிலிருந்து வெளியில் சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது தந்தை புகார் படி கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement