ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டி, : தொழிற்சங்க அங்கீகாரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாம்சங் தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, கள்ளர் பள்ளி ஆசிரியர்கள் இணைந்து உசிலம்பட்டி முருகன் கோயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் முருகன், தினேசன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement