கோட்டயம் - சென்னை நாளை முதல் சிறப்பு ரயில்

திருப்பூர் : முன்பதிவு டிக்கெட் கிடைக்காத பயணிகளுக்காக, கூடுதல் முன்பதிவில்லா பெட்டிகளுக்கு ஆயுத பூஜை சிறப்பு ரயில் கோட்டயம் - சென்னை இடையே, நாளை முதல் வரும், 14ம் தேதி வரை இயக்கப்படுகிறது.

இன்று இரவு, 11:55க்கு சென்னையில் புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06195) நாளை (11ம் தேதி) காலை, 6:25 க்கு திருப்பூர் வருகிறது; மதியம், 1:45க்கு கோட்டயம் சென்று சேர்கிறது.

வரும், 11 மற்றும் 13ம் தேதி மாலை, 6:10 க்கு கோட்டயத்தில் இருந்து புறப்படும் ரயில், மறுநாள் (12 மற்றும், 14ம் தேதி) நள்ளிரவு, 12:00க்கு திருப்பூர் வருகிறது; காலை, 8:20க்கு சென்னை சென்றடைகிறது.

பண்டிகை நாட்களில், கடைசி நேரத்தில், வெளியூர் செல்ல திட்டமிடும் பயணிகள் பலருக்கு முன்பதிவு டிக்கெட் கிடைப்பதில்லை. இதைக் கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே, இந்த சிறப்பு ரயிலில், எட்டு முன்பதிவு பெட்டியும், பத்து முன்பதிவில்லா பெட்டியும் இணைத்து இயக்குகிறது. இதனால், பிளாட்பார்மில் உடனடியாக டிக்கெட் எடுத்து பயணிகள் பயணத்தை தொடர முடியும்.

Advertisement