ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்
கோவை : கோவை மாநகர ஊர்காவல் படையில் சேர விரும்புவோருக்கு வரும், 14ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகிறது.
ஊர்க்காவல் படையில் சேர்ந்து பணியாற்ற விருப்பமுள்ள, கோவை மாநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் ஆண்கள், பெண்கள் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் வரும் 14ம் தேதி முதல், காந்திபுரம் காட்டூர் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள, கோவை மாநகர் ஊர்க்காவல் படை அலுவலகத்தில் வழங்கப்படவுள்ளது. துடியலுார், கவுண்டம்பாளையம், வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வசிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
20 முதல் 45 வயது வரை உடைய, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள், நவ.,11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, 94981 71293, 99423 46806 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement