லாரி - பைக் மோதல்; இரு வாலிபர்கள் பலி
அன்னுார் : அன்னுார் அருகே பொன்னே கவுண்டன்புதூரில் இருந்து, அரசூர் செல்லும் ரோட்டில், நேற்று மாலை மினி லாரி சென்று கொண்டிருந்தது. அரசூரில் இருந்து பொன்னே கவுண்டன் புதூர் நோக்கி வாலிபர்கள் இருவர் மோட்டார் பைக்கில் வந்து கொண்டு இருந்தனர்.
பச்சாபாளையம், சிவன் கோவில் அருகே, மினி லாரி, பைக் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த இருவரும் படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
போலீசார் விசாரணையில், இறந்தவர்களில் ஒருவர் சென்னை, அயனாவரம், முகமது ஜிலாவுதீன் மகன் அகமது அலிபாபா என தெரிய வந்தது. மற்றொருவரின் பெயர், விவரம் தெரியவில்லை. அன்னுார் போலீசார் விபத்து ஏற்படுத்திய மினி லாரி டிரைவர் மீது, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement