புள்ளிமான் வேட்டை; ஐவரிடம் விசாரணை

பெ.நா.பாளையம் : கோவை மாவட்டம், ஆனைகட்டியில் ஆர்நாட்காடு கிராம பகுதிக்கு வனத்துறையினரின் தனி குழு திடீர் ரோந்து சென்றது. அப்பகுதியில் உள்ள பட்டா நிலத்தில் பழனிசாமி,55, ராமகிருஷ்ணன், 55, ஆகியோர் சுருக்கு கம்பி வாயிலாக, பெண் புள்ளிமான் ஒன்றை வேட்டையாடியது தெரியவந்தது.

விசாரணையில், அதே பகுதியில் உள்ள பள்ளத்தில் பெண் புள்ளி மானின் தோலை உரித்து கூறு போட்டு இருவரும் தலா, 2 கிலோ தங்களது வீட்டுக்கு சமைப்பதற்கு எடுத்துச் சென்றது தெரியவந்தது. மீதமுள்ள சுமார், 10 கிலோ எடையுள்ள மான் கறியை தடாகத்தில் உள்ள மாதேஷ் மணிகண்டன், 23, குருஷியாம், 23, முருகேஷ்,33, ஆகிய மூன்று பேருக்கு, 4000 ரூபாய்க்கு, விற்பனை செய்தது தெரியவந்தது. ராமகிருஷ்ணன் உட்பட ஐந்து பேரை, கோவை வனத்துறையினர் பிடித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement