தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சண்முகம் முன்னிலைவகித்தார்.

சி.ஐ.டி.யு., மாநில குழு உறுப்பினர் சம்பத், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாணவர் சங்க மாவட்ட தலைவர் கல்கிராஜ் உள்பட தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்று, சாம்சங் தொழிலாளர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

Advertisement