மனைவிக்கு மிரட்டல் கணவன் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மனைவியை அடித்து கொலைமிரட்டல் விடுத்த கணவன் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கூத்தக்குடியை சேர்ந்தவர் விஜய் மனைவி கவிதா,23; இருவருக்கும் கடந்த 2023ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது கவிதா குடும்பத்தினர் 20 சவரன் நகை மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை சீர்வரிசையாக தந்துள்ளனர். தொடர்ந்து, சில நாட்களுக்கு பிறகு கணவன் விஜய் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு மனைவி கவிதாவை திட்டி, அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து மனைவி கவிதா அளித்த புகாரின் பேரில், கணவன் விஜய் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement