தென் மண்டல தடகளத்தில் 'பிளாட்டோஸ்' மாணவி
திருப்பூர் : தென்னிந்திய மண்டல அளவிலான, 35வது தடகளப் போட்டி, வரும், அக்., 17 முதல், 19ம் தேதி வரை ஆந்திர மாநிலம், குண்டூரில் நடக்கிறது.
போட்டியில், திருப்பூர் பிளாட்டோஸ் அகாடமி பள்ளியில், 10ம் வகுப்பில் படிக்கும் பிரேமா என்ற மாணவி, 16 வயதுக்குட்பட்டோர் மாணவியர் பிரிவில், 'பென்டத்லான்' போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார். தேர்வான மாணவி மற்றும் பயிற்சி வழங்கிய பயிற்சியாளர்கள் சுரேஷ், சந்தோஷ் ஆகியோரை, பள்ளி தாளாளர் ஹரிகிருஷ்ணன், அறங்காவலர் கிறிஸில்டா லோபஸ், பள்ளி முதல்வர் ஸ்ரீகுமாரி ஆகியோர் பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement