மயங்கி விழுந்து வி.ஏ.ஓ., பலி

நல்லுார் அடுத்த முதலிபாளையத்தில் வி.ஏ.ஓ., வாக பணிபுரிந்து வந்தவர், கலாராணி, 45. நேற்று மாலை அலுவலகத்தில் இருந்த திடீரென மயக்கமடைந்தார். உடன் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் வரவழைத்து, மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இருப்பினும், கலாராணியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு வி.ஏ.ஓ., இறந்தது எப்படி என்பது குறித்து, நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement