பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே பாதி வழியில் இறக்கி விட்டதால் டிரைவரையும், பஸ் கண்ணாடியயும் தாக்கி சேதப்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

உளுந்துார்பேட்டை தாலுகா கல்சிறுநாகலுார் பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு, 44; டிரைவர். தானம் பகுதிலிருந்து தியாகதுருகம் நோக்கி அரசு பஸ்சை ஓட்டி சென்றார்.

நேற்று காலை 8.30 மணியளவில் கல்சிறநாகலுார் பகுதியை சேர்ந்த வேங்கைமலை மகன் விஜய், 26; பஸ்சில் ஏறி டிக்கெட் எடுக்காமல் பிரச்னை செய்து வந்தார். இதனால் உளுந்துார்பேட்டை தாலுகா சீதேவி அருகே பஸ்சை நிறுத்தி விஜயை கீழே இறக்கி விட்டனர்.

இதில் ஆத்திரமடைந்த விஜய், பஸ் டிரைவர் சேட்டுவை கல்லால் தாக்கி , பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார்.

படுகாயமடைந்த டிரைவர் சேட்டுவை உடன் அருகில் இருந்தவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விஜயை கைது செய்தனர்

Advertisement