வீடு கட்டுமான பொருட்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் பழனியப்பா டிரேடர்ஸின் முத்திரை பதிக்கும் பணி

வீடு கட்டுமான பொருட்களை ஒரே இடத்தில், குறைந்த விலையில், நிறைவான தரத்துடன் வாழங்குகிறோம் என பழனியப்பா குழும நிர்வாக இயக்குனர் வாஞ்சிநாதன் கூறினார்.வீடு கட்டுவதற்கு அடித்தளம் இடுவதில் இருந்து, கட்டுமான பணியை நிறைவு செய்து, வண்ணப்பூச்சு வரை தேவையான அனைத்து பொருட்களும்

மணம்பூண்டி, திருவண்ணாமலை மெயின் ரோட்டில் இயங்கும் எங்கள் அலுவலகத்தில் இருந்து ஆர்டரின் பெயரில் சப்ளை செய்கிறோம். எங்கள் நிறுவன தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் தரமான எம்சேண்ட், ஜல்லி, கான்கிரீட் கலவைகள் குறிப்பிட்ட நேரத்தில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படுகிறது.

எங்கள் நிறுவனத்தின் மற்றுமோர் அங்கமாக, ப்ளை ஆஷ் செங்கல் உற்பத்தி ஆலையை நிறுவி கால சூழலுக்கு ஏற்ற, குறைந்த செலவில், அதிக உறுதிப்பாட்டுடன் கூடிய நவீன செங்கற்கலை விற்பனை செய்கிறோம். ஆர்டருக்கு ஏற்ப கட்டுமான தளங்களுக்கே நேரடியாக கொண்டு சேர்த்து வருகிறோம். இவை சுற்றுச்சூழலுக்கு உகந்த, நிலையான தரம் மற்றும் வலிமை கொண்டது. செலவு குறைவு, நீர்க்கசிவு இல்லாத, உறுதியான கட்டுமானம், வெப்ப காப்பு மற்றும் தீ எதிர்ப்பு உள்ளிட்ட சிறப்பு அம்சங்களைக் கொண்டது. கட்டுமானத்துறையில் புதிய யுத்தியை கையாளும் எங்கள் நிறுவனத்தின் சிறப்பான தொழிற்சாலையாக இது உள்ளது.

தேவனூர் கூட்டு ரோட்டில் டைல்ஸ், பெயிண்ட், பிளமிங், ஹார்ட்வேர்ஸ் என ஒரே இடத்தில் அனைத்து கட்டுமான பொருட்களும் கிடைக்கும் வகையில், பிரம்மாண்ட, காட்சிப்படுத்தப்பட்ட விற்பனை நிலையம் உள்ளது.

திருவண்ணாமலை பழையனூரில் இயங்கும் எர்த் மூவர்ஸ் & கிரேன் சர்வீஸ் மூலம் புளூ மெட்டல் விற்பனை செய்யப்படுகிறது. கனவு இல்லத்தை குறைந்த விலையில் நிஜ இல்லமாக கட்டி முடிக்க எங்கள் பழனியப்பா பில்டர்ஸ் என்றென்றும் துணை நிற்கும் இவ்வாறு அதன் நிர்வாக இயக்குனர் வாஞ்சிநாதன் கூறினார்.

Advertisement