அடுத்த ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அட்டவணை வெளியீடு

1

சென்னை: வரும் 2025ம் ஆண்டில் நடத்தப்படும் தேர்வுகளுக்கான அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.



டி.என்.பி.எஸ்.சி., அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் மூலம் காலியாக உள்ள அரசுத் துறைகளின் பொறுப்புகளுக்கு ஆட்கள் நியமிக்கப்படுவது வழக்கம்.


இந்த நிலையில், அடுத்தாண்டுக்கான தேர்வுத்திட்டம் (பிளானர்), இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி வெளியிடப்பட்டு, ஜூன் 15ம் தேதி தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்., 25ம் தேதி வெளியிடப்பட்டு, ஜூலை 13ம் தேதி நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்டர்வ்யூ தேர்வு




அறிவிப்பு : மே 07ம் தேதி


தேர்வு: ஜூலை 21ம் தேதி


இன்டர்வ்யூ அல்லாத தேர்வு





அறிவிப்பு: மே 21ம் தேதி


தேர்வு: ஆகஸ்ட் 4ம் தேதி


டிப்ளமோ /ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான தேர்வு




அறிவிப்பு: ஜூன் 13ம் தேதி


தேர்வு: ஆகஸ்ட் 27ம் தேதி


குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள்




அறிவிப்பு; ஜுலை 15ம் தேதி


தேர்வு: செப்., 28ம் தேதி


குரூப் 5ஏ தேர்வு




அறிவிப்பு; அக்டோபர் 07ம் தேதி


தேர்வு : டிச., 21ம் தேதி


தேர்வு குறித்த மேலும் விபரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement