இங்கிலாந்தில் சென்னை அணி * 'மினா' கோப்பை கால்பந்து தொடருக்காக...

சென்னை: இங்கிலாந்தில் நடக்கும் சர்வதேச கால்பந்து தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்கிறது சென்னை யூத் அணி.
இங்கிலாந்தில் சர்வதேச அளவிலான நார்விச் சிட்டி மினா கோப்பை கால்பந்து தொடர் (12 வயதுக்குட்பட்ட) நாளை துவங்குகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள இளம் வீரர்களை கண்டறியும் வகையில் இத்தொடர் நடக்கிறது. உலகின் மிகப்பெரிய கிளப் அணிகளான செல்சியா, ஆர்சனல், லிவர்பூல், இன்டர் மிலன், பெனிபிகா, லீட்ஸ் யுனைடெட், ரோட்டர்டாம், போருசியா டார்ட்மன்ட் உட்பட 16 அணிகள் பங்கேற்கின்றன.
இந்தியா சார்பில் சென்னை அணி களமிறங்குகிறது. நார்விச் அணியுடன் இணைந்து செயல்படுவதன் அடிப்படையில் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. 2025ல் நடக்கவுள்ள 'மினா கோப்பை' தொடருக்கான தகுதிப் போட்டியான இதில் ஒவ்வொரு அணியிலும் தலா 9 வீரர்கள் பங்கேற்பர். இதற்கான 15 பேர் கொண்ட சென்னை அணி, இங்கிலாந்து சென்றுள்ளது.

Advertisement