வெடி விபத்தால் பாதிப்பு; அமைச்சர் ஆறுதல்

திருப்பூர் : பாண்டியன் நகரில் வீட்டில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட நாட்டு வெடி, வெடித்து, ஒன்பது மாதம் குழந்தை உட்பட, நான்கு பேர் இறந்தனர். 17 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக, இருவரை திருமுருகன்பூண்டி போலீசார் கைது செய்தனர். வெடி விபத்தில் சுற்றியுள்ள, 40க்கும் மேற்பட்ட வீடுகள், பனியன் நிறுவனம் சேதமானது.

காயமடைந்தவர்கள் அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் சாமிநாதன் நேற்று மாலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, குறைகளை கேட்டார். அவர்களுக்கு கட்சி சார்பில், நிவாரண தொகையை அளித்தார். கலெக்டர் கிறிஸ்துராஜ், மருத்துவ கல்லுாரி 'டீன்' முருகேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Advertisement