ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கனமழை

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மதியம் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த மாதம் நெல் விதைப்பு செய்யப்பட்டது. நெல் விதைப்பு செய்யப்பட்ட பின் நெல் முளைப்புக்கு ஏற்ற பருவமழையின்றி விவசாயிகள் பாதிப்படைந்தனர்.

தொடர்ந்து சில பகுதிகளில் விதைப்பு செய்த நெல் விதைகள் முளைப்புத் திறனை இழந்ததால் மீண்டும் நேரடி நெல் விதைப்பு செய்து பருவமழையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் பெய்த மழை சில பகுதியில் நெல் முளைப்புக்கு ஏற்றதாக அமைந்தது. சில பகுதிகளில் போதிய மழையின்றி விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பரவலாக பெய்த மழை நெல் விதைப்பு செய்து காத்திருந்த விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்தது.

இதனால் களைக்கொல்லி மருந்து தெளித்தல், வாய்க்கால் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement