மாநில அளவிலான பேட்மின்டன் போட்டி

முதுகுளத்துார்: முதுகுளத்துார் வில்வா பேட்மின்டன் அகாடமியில்​மிலாடிநபியை முன்னிட்டு மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி 3ம் ஆண்டு மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி நடந்தது. கவுரவத் தலைவர் காதர் முகைதீன், அகாடமி உரிமையாளர் ரமேஷ்குமார் முன்னிலை வகித்தனர்.

ராமநாதபுரம், மதுரை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர். இரண்டு பிரிவாக போட்டிகள் நடந்தது.

இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் மதுரையைச் சேர்ந்த பாலா --வீரபாண்டி ஜோடி முதல் பரிசும், சாயல்குடி கந்தவேல்--கல்யாண் 2வது பரிசும் பெற்றனர்.

ஒருங்கிணைந்த 70 வயதிற்கு மேற்பட்ட பிரிவில் திருச்சி கந்தவேல்--ரிஷி முதல் பரிசும், மதுரை பாலா--இளையராஜா 2வது பரிசும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வில்வா பேட்மின்டன் அகாடமி நிர்வாகிகள் செய்தனர்.

Advertisement