மானாமதுரை வீர அழகர் கோயிலில் அக்.13 லட்சார்ச்சனை விழா
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயிலில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், உலக நன்மைக்காகவும் அக்.13ல் லட்சார்ச்சனை விழா நடைபெற உள்ளது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை வீர அழகர் கோயிலில் பெருமாளுக்குரிய புரட்டாசி மாதத்தில் வருடம் தோறும் லட்சார்ச்சனை விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான விழா அக்.13ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு அன்று சுந்தரராஜ பெருமாளுக்கு அதிகாலை பால், பன்னீர், சந்தனம், குங்குமம், தயிர், திரவியம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டு அதனைத் தொடர்ந்து ஹோமங்கள் வளர்க்கப்பட்டு அர்ச்சகர்களால் லட்சார்ச்சனை விழா நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து அபிஷேக, ஆராதனை, தீபாராதனை, பூஜைகள் நடைபெற உள்ளன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement