செங்கை கலெக்டர் ஆபீஸில் மயங்கிய முதியவர் உயிரிழப்பு

மறைமலை நகர்,
திருக்கழுக்குன்றம் அடுத்த நால்வர்கோவில்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 82. இவர், இரண்டு மாதங்களுக்கு முன், தன் மகன் உமாசங்கர், 57, தன்னை சரிவர கவனித்துக் கொள்வதில்லை என, கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்த புகார் மீதான விசாரணை நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள டி.ஆர்.ஓ., அலுவலகத்தில் நடந்தது.

இதில், கார்த்திகேயன் மற்றும் உமாசங்கர் இருவரும் ஆஜராகி விசாரணை முடிந்து, இரவு 7:00 மணிக்கு வீட்டிற்கு செல்ல வாகனம் நிறுத்துமிடம் வந்தனர். அப்போது, கார்த்திகேயன் மயக்கம் வருவதாகக் கூறி, அந்த இடத்தில் அமர்ந்தார். பின், அதே இடத்தில் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், இறந்த முதியவரின் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement