தலையில்லாத ஆண் சடலம் அலமாதி ஏரியில் மீட்பு

சோழவரம், திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதி பகுதியில் உள்ள ஏரியில், சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சோழவரம் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று தலையில்லாமல் கிடந்ததை கண்டனர்.

எலும்புகள் வெளியில் தெரிந்த நிலையில், அழுகிய நிலையில் இருந்த சடலத்தைக் கைப்பற்றி, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 20 நாட்களுக்கு முன், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு, ஏரியில் வீசப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

இறந்தவர் குறித்து அடையாளம் காணமுடியாத நிலையில், அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து காணாமல் போனவர்கள் குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement