சாலை விபத்தில் மேஸ்திரி பலி

சென்னை, மதுரவாயல், பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 67; மேஸ்திரி. நேற்று மாலை, இருசக்கர வாகனத்தில், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவ்வழியாக வந்த வாட்டர் டேங்கர் லாரி மோதியதில், நிலை தடுமாறி விழுந்தார்.

இதில், இடித்த லாரியின் பின்சக்கரம், மேஸ்திரி தலையில் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலே யே அவர் உயிரிழந்தார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், லாரி ஓட்டுனரை நையப் புடைத்தனர். கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும் காயமடைந்த, லாரி ஓட்டுனர் சங்கர், 23, மதுரவாயலில் உள்ள லலிதாம்பிகை மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

Advertisement