நடுரோட்டில் வயதான தம்பதி மீது கொடூர தாக்குதல்; பதற வைக்கும் பக்கத்து வீட்டுக்காரரின் செயல்

2

மலப்புரம்: கேரளாவில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால், ஆத்திரத்தில் வயதான தம்பதி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வெங்காராவைச் சேர்ந்த அசைன்,70, பதும்மா,62, ஆகிய வயதான தம்பதி, பக்கத்து வீட்டைச் சேர்ந்த அப்துல் கலாம் என்பவரின் குடும்பத்திற்கு ரூ.23 லட்சம் பணத்தை கடனாக கொடுத்துள்ளார். இந்தப் பணத்தை திருப்பித் தருமாறு பலமுறை கேட்டும், ஏதேதோ காரணத்தை சொல்லி மழுப்பி வந்துள்ளனர்.


ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பணத்தை தராததால், அசைன் தனது மனைவி மற்றும் மகன் முகமது பசீருடன் சேர்ந்து, அப்துல் கலாம் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.


இதைப்பார்த்த அப்துல் கலாம் குடும்பத்தினர் , வயதான தம்பதி என்று கூட பாராமல் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement