உத்தமபாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகில் நின்றிருந்த கார் மீது லாரி மோதி ஒருவர் பலி 3 பேர் காயம்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வெள்ளத் தூவல் என்ற ஊரிலிருந்து லாரி ஒன்று கட்டைகளை ஏற்றிக் கொண்டு திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை உத்தமபாளையத்தை சேர்ந்த டிரைவர் அக்பர் 27 ஒட்டி வந்தார். இன்று காலை 7 மணியளவில் உத்தமபாளையம் பஸ் ஸ்டாண்ட் திருப்பத்தில் லாரி திரும்பிய போது, தனது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்து இட்லி கடை வண்டி மீது மோதியது. அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த கேரள மாநிலத்தை சேர்ந்த தாமஸ் மேத்யூ 46 மீது வடை சுடுவதற்காக கொதித்து கொண்டிருந்த எண்ணெய் கொட்டியது.

தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது சிகிச்சை பலனின்றி இறந்து போனார் இந்த விபத்தில் உத்தமபாளையத்தை சேர்ந்த வெள்ளையம்மாள் 52, பவித்ர 14 காய மடைந்தனர். இட்லி கடைக்கு பின்னாள் நின்றருந்த கார் மீது லாரி மோதி காரில் உட்கார்ந்திருந்த அட்வகேட் கனகராஜ் 70 காயமடைந்தார். உத்தமபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். டிரைவர் அக்பர் போலீசில் சரண்டைந்தார்.

Advertisement