போலீஸ் ரோந்தில் இருவர் கைது
மணவாளநகர்,கடம்பத்துார் ஒன்றியம் நயப்பாக்கம் செல்லும் சாலையில் நேற்று முன்தினம் மணவாளநகர் காவல் ஆய்வாளர் சத்யபாமா மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது அப்பகுதியில் மதுபோதையில் இரும்பு கம்பியுடன் நின்று கொண்டிருந்த இருவரை போலீசார் பிடித்துநடத்தினர்.
விசாரணையில் அவர்கள் மணவாளநகர் எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்த வெங்கடேசன், 23 மற்றும் ரேவந்த், 24 எனவும், அவர்கள் அவ்வழியே வருவோரிடம் வழிப்பறி செய்ய திட்டம் தீட்டியது தெரிந்தது.
போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement