எம்.ஆர்.பி., செவிலியர் பெருந்திரள் முறையீடு

ஈரோடு, அக். 15-
தமிழ்நாடு எம்.ஆர்.பி., செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், பெருந்திரள் முறையீடு செய்தனர்.
தேர்தல் வாக்குறுதிப்படி எம்.ஆர்.பி., தொகுப்பூதிய செவிலியர் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். புதிதாக துவங்கப்பட்ட, 11 மருத்துவ கல்லுாரி மருத்துவமனை உட்பட அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள, 1,500 செவிலியர் பணியிடங்களை எம்.ஆர்.பி., தொகுப்பூதிய செவிலியர்களை கொண்டு உடன் நிரப்ப வேண்டும்.
பாலியல் குற்றங்களை விசாரிக்க அனைத்து மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Advertisement