நம்பியூரில் நாளை 'உ.தேடி உ.ஊரில்'

நம்பியூரில் நாளை
'உ.தேடி உ.ஊரில்'
ஈரோடு, அக். 15-
ஒவ்வொரு மாதமும், மூன்றாவது புதன் கிழமையில், 'உங்களை தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வட்ட அளவில் தங்கி, கள ஆய்வு செய்கிறார். இதன்படி வரும், 16ம் தேதி காலை, 9:00 மணி முதல், 17 காலை, 9:00 மணி வரை நம்பியூர் வட்டத்தில் தங்கி, பல்வேறு அரசு துறை மூலம் செயல்படும் திட்டப்பணிகளை கள ஆய்வு மேற்கொள்கிறார். 16ம் தேதி மாலை, 4:30 மணி முதல், 6:30 மணி வரை நம்பியூர் தாலுகா அலுவலகத்தில், மக்களிடம் இருந்து மனுக்கள் பெறுகிறார்.

Advertisement