பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனை கூட்டம்

சிவகாசி: சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் பருவமழை பாதிப்புகளில் இருந்து மக்களை காக்கும் வழிமுறைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

மேயர் சங்கீதா தலைமை வகித்தார். கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். மழைக்காலங்களில் நீர்நிலை ஓடைகள் துார்வாறுதல், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் வெளியேற்றுதல், மழையால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களை காக்கும் வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேயர் கூறுகையில், பருவமழை துவங்க உள்ள நிலையில் நீர்நிலைகள், தண்ணீர் செல்லும் ஓடைகள் துார்வாரப்பட்டு வருகின்றது. முக்கிய ரோடுகள், குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் வெளியேறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்றார்.

Advertisement