குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மனு
ராமநாதபுரம்: கீழக்கரை தாலுகா வெள்ளாமருச்சுக்கட்டி கிராம மக்கள் குடிநீர் வழங்கக் கோரி காலி குடங்களுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
வெள்ளாமருச்சுக்கட்டி கிராமத்தில் நுாறுக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த மூன்றாண்டுகளாக காவிரிக் கூட்டுக் குடிநீர் வரவில்லை. இதனால் உவர்ப்புத் தன்மை கொண்ட நீரை குடிநீராக பயன்படுத்துகிறோம். சிலர் விலைக்கு வாங்குகின்றனர்.
இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
எனவே வெள்ளாமருச்சுக்கட்டி கிராமத்திற்கு உடனடியாக காவிரி குடிநீர் வழங்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement