போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள்: இ.பி.எஸ்., வலியுறுத்தல்

சென்னை: மழை பாதித்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தி.மு.க., அரசு பொறுப்பு ஏற்றதில் இருந்து மேற்கொண்ட வெள்ள தடுப்பு பணிகள் குறித்து அறிக்கை வெளியிடுவதுடன் வெள்ள நீர் தேங்குவதில் இருந்து பாதுகாக்க அமைத்த குழு அளித்த அறிக்கையின் மீது எடுத்த நடவடிக்கை குறித்தும் வெள்ளை அறிக்கை வேண்டும்


மீட்பு நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும். 2021 ல் அமைத்த திருப்புகழ் கமிட்டி அறிக்கை வந்துவிட்டதா? தி.மு.க., அரசு எடுத்த நடவடிக்கை என்ன? எத்தனை சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன என்பது குறித்து வெளிப்படையாக கூற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் பழனிசாமி கூறியுள்ளார்.

Advertisement