லஞ்சம் வாங்கிய விளாம்பட்டி எஸ்.ஐ.,க்கு 2 ஆண்டு சிறை

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டியில் வழக்கிலிருந்து விடுவிக்க கூலித்தொழிலாளியிடம் ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ.,க்கு
2 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி முத்துமணி35. 2012 அக்டோபரில் இவருக்கும் பக்கத்து வீட்டு காரருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் மாறி தாக்கினர். இதுதொடர்பாக இருதரப்பினரும் விளாம்பட்டி

போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க இதை அங்கு பணியாற்றிய திண்டுக்கல்லை சேர்ந்த எஸ்.ஐ.,வெள்ளைச்சாமி,விசாரித்தார்.

அப்போதுமுத்துமணியை,வழக்கிலிருந்து விடுவித்து,பெயில் பெறுவதற்காக ரூ.4 ஆயிரம் லஞ்சமாக எஸ்.ஐ.,வெள்ளைசாமி கேட்டார். லஞ்சம்கொடுக்க விரும்பாத முத்துமணி, திண்டுக்கல் லஞ்சம் ஒழிப்பு போலீசில் புகாரளிக்க போலீசார் எஸ்.ஐ.,வெள்ளைசாமி,லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடித்தனர். இதன்வழக்கு திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது.

அரசுதரப்பு வழக்கறிஞராக அனுராதா ஆஜராகினார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கனகராஜ்,லஞ்ச வழக்கில் சிக்கியஎஸ்.ஐ.,வெள்ளைசாமிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை,
ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Advertisement