மழை பாதிப்புகளை அரசு முறையாக கையாளும்: கவர்னர் நம்பிக்கை

4

சேலம்: ''மழை பாதிப்புகளை தமிழக அரசு முறையாக கையாளும் என நம்புகிறேன், '' என தமிழக கவர்னர் ரவி கூறியுள்ளார்.


சேலத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: வானிலை மையத்தின் எச்சரிக்கைக்கு ஏற்ற வகையில் மழையை எதிர்கொள்ள அரசு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. மழை பாதிப்புகளை சரி செய்ய சாத்தியமான அனைத்து வழிவகைகளிலும் முயற்சித்து வருகிறது.


வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகம் பெய்யும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது. அதற்கு ஏற்ற வகையில் தமிழக அரசு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. மழை பாதிப்புகளை தமிழக அரசு முறையாக கையாளும் என நம்புகிறேன். இவ்வாறு கவர்னர் கூறினார்.

Advertisement