2025-26ம் நிதியாண்டு மத்திய பட்ஜெட் தாக்கல்; முக்கிய அம்சங்கள்
புதுடில்லி: பார்லிமென்டில் 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனாதிபதி உரையுடன் நேற்று(ஜன.31) துவங்கியது. அப்போது லோக்சபா மற்றும் ராஜ்யசபா கூட்டு கூட்டத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். இந்நிலையில், இன்று (பிப்.,01) முற்பகல்11 மணிக்கு பார்லிமென்டில் 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
பட்ஜெட் உரையில் அவர் பேசியதாவது;
* இளைஞர் முன்னேற்றம், வேளாண்மை, வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட அம்சங்களை கொண்டு பட்ஜெட்டை தயாரிப்பு,
* வரிவிதிப்பு, நகர்ப்புற மேம்பாடு, கனிமவளம், நிதி மேலாண்மை,மின்சாரம், ஒழுங்குமுறை ஆகிய 6 துறைகளில் சீரமைக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது.
* பாரதத்தை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்கும் பணியை செய்து வருகிறோம்
* உலகின் பெரிய பொருளாதரங்களிலேயே வளர்ச்சியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
* நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்
* உலகின் வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது.
* நாட்டின் வளர்ச்சிக்கு விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது.
* பருப்பு உற்பத்தில் ஆறு ஆண்டுகளில் தன்னிறைவு அடைய இலக்கு.
* புதிய வேளாண் திட்டத்தின் மூலம் 1.7 கோடி விவசாயிகள் பயன்பெற உள்ளனர்.
* தாமரை விதைகளுக்காக புதிய வாரியம் பீஹாரில் அமைக்கப்படும்.
* விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படும். நாட்டின் முதுகெலும்பாக விவசாயிகள் திகழ்கின்றனர்.
* அசாமில் யூரியா உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும்.
* கிசான் கிரெடிட் கார்டுகளுக்கான உச்சவரம்பு 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
* உலகின் உற்பத்தி மையமாக இந்தியா திகழ சிறு,குறு நிறுவனங்கள் தான் காரணம்.
வாசகர் கருத்து (8)
kulandai kannan - ,
01 பிப்,2025 - 11:51 Report Abuse
இந்த பட்ஜெட் விவரங்களல்லாம் ஊபிஸுக்குப் புரியுமா ??
0
0
Reply
vetri - NELLAI,இந்தியா
01 பிப்,2025 - 11:42 Report Abuse
தினமும் சாப்பிடுகிற அரிசிக்கு விதிக்கிற ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும். நடுத்தரம் மற்றும் தெருவோரம் வசிப்போரை இல்லாமல் ஆக்குவதன் உங்கள் நோக்கம். விவசாயி விவசாயி என்கிறீர்கள் கடைகோடி விவசாயி இன்றும் அப்படி தான் இருக்கிறான். ஒரு முன்னேற்றமும் இல்லை... நிதியமைச்சருக்கு எல்லாமே இலவசம் தான்... அதனால் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வலி தெரியாது. பட்ஜெட் என்றுமே இருக்கிறவர்களுக்கு தான். ஜி.எஸ்.டியை
மட்டுமே வாழும் மத்திய அரசு கடைகோடி மக்களின் நிலையை மாற்றினால் நல்லது.
0
0
Reply
Ray - ,இந்தியா
01 பிப்,2025 - 11:37 Report Abuse
கிசான் கிரெடிட் கார்டுகளுக்கான உச்சவரம்பு 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. என்பது வங்கிகளுக்கு நல்ல செய்தி விவசாயிகள் விவஸ்தையில்லாமல் மேலும் மேலும் கடன் வாங்கலாம் அரசு ஒத்த ரூபா கூட தள்ளுபடி WRITE OFF எல்லாம் செய்ய மாட்டாங்களே
0
0
Reply
ஆரூர் ரங் - ,
01 பிப்,2025 - 10:51 Report Abuse
சலுகைகள் வேண்டாம். வளர்ச்சிக்கும் உட்கட்டமைப்பு க்கான முதலீட்டுச் செலவுகளை அதிகரித்தால் நீண்டகால அளவில் அபரிமிதமான வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். 100 நாள் சோம்பேறி திட்டத்தை நிறுத்துங்கள்.
0
0
Reply
Indian - kailasapuram,இந்தியா
01 பிப்,2025 - 10:39 Report Abuse
ஊறுகாய்க்கு பதினெட்டு சதவிகித வரி இருக்குமா ?
0
0
veera - ,
01 பிப்,2025 - 11:05Report Abuse
நீ வாங்குற டாஸ்மாக் ஊருகாய்கு எது gst?
0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
01 பிப்,2025 - 10:11 Report Abuse
நடுத்தர வருவாய்ப்பிரிவினர் மேல இரக்கம் காட்டுங்க நிம்மா ... இல்லன்னா .,
0
0
Reply
M. PALANIAPPAN - PERUMBAVOOR, KERALA,இந்தியா
01 பிப்,2025 - 09:52 Report Abuse
மிடில் கிளாஸ் மக்களுக்கு உதவும் வகையில் பட்ஜெட் வெளியிட்டால் மிகவும் நல்லது
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement