ஊத்துக்காடு எல்லம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகுவிமரிசை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த ஊத்துக்காடு கிராமத்தில், எல்லம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த 30ல் கணபதி பூஜை மற்றும் மாலை 5:00 மணிக்கு பிரவேச பலி பூஜையுடன் விழா துவங்கியது.

கடந்த 31ம் தேதி காலை 9:00 மணிக்கு சாந்தி ஹோமம், மாலை 5:00 மணிக்கு முதல் கால பூஜை. நேற்று முன்தினம் இரண்டாம் கால பூஜை, மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை நடந்தன.

நேற்று காலை 8:00 மணிக்கு நான்காம் கால பூஜையும், காலை 10:00 மணிக்கு கலச புறப்பாடு நடந்தது. அதை தொடர்ந்து, காலை 10:20 மணிக்கு கோபுர கலசத்தின் மீது, புனித நீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது. பின், மூலவர் எல்லம்மனுக்கு புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், கோவில் அறங்காவலர்கள் மற்றும் பல்வேறு கிராம வாசிகள் பங்கேற்றனர்.

Advertisement