இளநீர் விலை ரூ.2 உயர்வு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை விட, ஒரு ரூபாய் ரூபாய் உயர்ந்துள்ளது.

ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது: இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில் இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டு, 30 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 11,250 ரூபாய். வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் கடந்த மாதத்தைவிட, தற்போது, இளநீர் வரத்து கணிசமாக குறைந்துள்ளது. எடைக்கு இளநீர் வெட்டும் விவசாயிகள், குறைந்தபட்சம் ஒவ்வொரு அறுவடைக்கும் இடையே 35 நாட்கள் இடைவெளி கொடுக்க வேண்டும். முன்கூட்டியே வெட்டுவதால் இளநீரின் எடை 2 கிலோ வரை குறைவாகவே இருக்கும். இனிவரக்கூடிய காலத்தில், இளநீரின் விலையை குறைத்து விற்க வேண்டாம். அதன் விலை, வரும் நாட்களில் தொடர்ந்து கணிசமாக உயரும். இவ்வாறு, கூறினார்.

Advertisement