தைப்பூசம் எதிரொலி முட்டை விலை சரிவு
நாமக்கல்: நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்-புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்-ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 505 காசுக்கு விற்ற முட்டை விலை, 20 காசு குறைத்து, 485 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. விரைவில் தைப்பூசம் வருவதால், தமிழகத்தில், முட்டை நுகர்வு சரிந்துள்ளது. வடமாநிலங்களில் குறைக்கப்பட்டுள்ளதாலும், கொள்முதல் விலையை குறைக்க வேண்டிய நிலைக்கு பண்-ணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதனால், கொள்முதல் விலை, 20 காசு குறைக்கப்பட்டுள்-ளது.
நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) நிலவரம்:
சென்னை, 560, ஐதராபாத், 460, விஜயவாடா, 500, பர்வாலா, 442, மும்பை, 535, மைசூரு, 535, பெங்க-ளூரு, 535, கோல்கட்டா, 530, டில்லி, 470 என, நிர்-ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லில், நேற்று நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ, 80 ரூபாய்க்கு விற்ற முட்டைக்-கோழி விலையை, எவ்வித மாற்றமும் செய்-யாமல் அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதேபோல், பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில், ஒரு கிலோ, 100 ரூபாய்க்கு விற்ற கறிக்கோழி விலையிலும் எந்த மாற்றமும் செய்யாமல், அதே விலை நிர்-ணயம் செய்யப்பட்டது.