புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு 'சீல்'

பாலக்கோடு: பாலக்கோட்டில், உணவு பாதுகாப்பு துறை மற்றும் போலீசார் நடத்திய சோதனையில், புகையிலை பொருட்கள் விற்ற, 2 கடைகளுக்கு, 'சீல்' வைத்து, அபராதம் விதித்தனர்.


தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நிய-மன அலுவலர் பானுசுஜாதா ஆலோசனைப்படி, பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலு-வலர் நந்தகோபால், பாலக்கோடு போலீசார் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட குழுவினர் இணைந்து, பாலக்கோடு பஸ் ஸ்டாண்ட், எம்.ஜி.,ரோடு உள்ளிட்ட பகுதி கடை-களில் சோதனை செய்தனர். இதில், பாலக்கோடு பஸ் ஸ்டாண்டில் உள்ள ஒரு பீடா கடை மற்றும் காவாப்பட்டி பிரிவு சாலையில் ஒரு மளிகை கடையில், அரசு தடை செய்த புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரி-யவந்தது. இதையடுத்து, 2 கடைகளுக்கும், 'சீல்' வைத்து தலா, 25,000 ரூபாய் அபராதம் விதித்-தனர். மேலும், பஸ் ஸ்டாண்டிலுள்ள ஓட்டல்-களில் ஆய்வு செய்த போது, சமைத்த உணவுகள் முறையாக பராமரிக்காமல், திறந்த நிலையில் வைத்திருந்தனர். இதில், 3 ஓட்டல்களுக்கு தலா, 1,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

Advertisement