சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு போலீஸ் வலை
ஓசூர்: ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், குப்பத்தை சேர்ந்தவர் சங்கர், 21. கூலித்தொழிலாளி; இவர், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் வசித்த, 15 வயது சிறுமியை கடந்த நவ., 29 அதிகாலை, 5:00 மணிக்கு, சிகரலப்பள்ளியிலுள்ள நாகம்மா கோவிலில் வைத்து, பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்.
அவரிடமிருந்து தப்பிய சிறுமி, கர்நாடகா மாநி-லத்தில் தனியாக சுற்றித்திரிந்தார். அவரை, கடந்த சில நாட்களுக்கு முன், கே.ஜி.எப்., போலீசார் பிடித்து விசாரித்த போது, அவருக்கு திருமணம் நடந்து, தப்பியோடி வந்தது தெரிந்தது.உடனடியாக, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்-திற்கு தகவல் தெரிவித்த போலீசார், கிருஷ்ண-கிரி மாவட்ட குழந்தைகள் நலத்துறையிடம் சிறு-மியை ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக, சூளகிரி தாலுகா குழந்தைகள் நல அலுவலர் ஜெயம்மா, 60, நேற்று முன்தினம் அளித்த புகார் படி, ஓசூர் அனைத்து மகளிர் போலீசார், சிறுமியை திருமணம் செய்த சங்கரை தேடி வருகின்றனர்.