நாமக்கல் உழவர் சந்தையில் 41 டன் காய்கறி விற்பனை
நாமக்கல்: நாமக்கல், கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினமும் அதி-காலை, 5:00 முதல், 10:00 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்-டங்களில் விளைந்த காய்கறி, பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்-றனர்.
பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். வழக்க-மாக, வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்-றுக்கிழமைகளில் அதிகளவில் வாடிக்கையா-ளர்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறி, பழங்-களை வாங்கி செல்வது வழக்கம்.தற்போது, தை மாதம் முகூர்த்த சீசன் துவங்கி-யுள்ளது. இதனால், நேற்று வழக்கத்தை விட விறுவிறுப்பாக வியாபாரம் நடந்தது. மொத்தம், 156 விவசாயிகள், 34,620 கிலோ காய்கறி, 6,785 கிலோ பழங்கள், 10 கிலோ பூக்கள் என மொத்தம், 41,415 கிலோ விளைபொருட்களை கொண்டு-வந்து விற்பனை செய்தனர்.
அவற்றை, 8,283 பொதுமக்கள் வாங்கிச்சென்-றனர். அதன் மூலம், 17 லட்சத்து, 8,035 ரூபாய்க்கு விற்பனையானது. தக்காளி ஒரு கிலோ, 24, கத்-தரி, 28, வெண்டை, 38, புடலங்காய், 45, சின்ன வெங்காயம், 60, பெரிய வெங்காயம், 40, பூண்டு, 270 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.