ரெங்கேஸ்வரா நர்சிங் கல்லுாரியில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
நாமக்கல்: நாமக்கல், பொட்டிரெட்டிப்பட்டியில் அமைந்-துள்ள ரெங்கேஸ்வரா நர்சிங் கல்லுாரியில், இரண்டாவது குழுவின், முதலாண்டு மாணவ, மாணவியர், விளக்கேற்றி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்வி அறக்கட்டளை பெருந்த-லைவர் வக்கீல் சரவணன் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர் சுப்ரமணி வரவேற்றார். செய-லாளர் வேலுசாமி, பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ப.வேலுார் சுகம் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் சுகிதா பேசியதாவது:
இன்றைய நவீன காலத்தில், மொபைல் போனை பயனுள்ள செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தவறான பாதையில் செல்லக்கூடாது. செவிலியர் பயிற்சி பெறும் ஒவ்வொரு மாணவ, மாணவியரும் முழு அர்ப்ப-ணிப்புடனும், எந்தவித பாகுபாடும் காட்டாமல் தாங்கள் மேற்கொண்ட செவிலியர் பணியை சிறப்புடன் செய்ய வேண்டும். மேலும், பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் மருத்-துவ சேவையை போற்றும் வகையில், அவரின் தன்னலமற்ற சேவையை பின்பற்றி, அனை-வரும் சேவை புரிய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, ரெங்கேஸ்வரா நர்சிங் கல்லுாரி முதல்வர் நற்றமிழ், உறுதிமொழி வாசிக்க, மாணவ, மாணவியர் ஏற்றனர். ரெங்கேஸ்வரா கல்வியியல் கல்லுாரி முதல்வர் பாலசுப்ரம-ணியன், நிர்வாக அலுவலர் மகேஸ்வரி, பேராசி-ரியர் சரண்யா, விரிவுரையாளர்கள், பேராசி-ரியர்ள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்-கேற்றனர்.