புகார் பெட்டி மின்கம்பத்தை சூழ்ந்த செடி, கொடிகள்

திருவாலங்காடு ஒன்றியம், பெரியகளக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்டது ஜே.எஸ்.ராமாபுரம் கிராமம். இங்கு, கிராமத்தின் பிரதான சாலையில் உள்ள மின்கம்பத்தை சூழ்ந்து செடி, கொடிகள் படர்ந்து வளர்ந்துள்ளன.

இந்த செடி, கொடிகள் மின்கம்பத்தை சூழ்ந்துள்ளதால் காற்றில் அசையும் சமயத்தில், மின்தடை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே, உடனடியாக அதை அகற்றி சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஆர். வினோத்குமார், ஜே.எஸ்.ராமாபுரம்.

Advertisement