சாய்பாபா கோவிலில் கலசநீர் அபிஷேகம்
திருத்தணி,
திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை, ஷீரடி சாய்பாபா கோவிலின், 21ம் ஆண்டு உற்சவ விழா, நாளை நடக்கிறது. அன்று, கோவில் வளாகத்தில், ஒரு யாகசாலை, 5 கலசங்கள் வைத்து கணபதி, நவகிரக ஹோமம் நடைபெறுகிறது.
காலை 9:30 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, ஏகாதசி ருத்ராபிஷேகம், நண்பகல் 11:30 மணிக்கு, மூலவர் சாய்பாபாவிற்கு கலசநீர் அபிஷேகம் நடைபெறும்.
மதியம் 2:00 மணி முதல், இரவு 9:00 மணி வரை, ஓம் சாய், ஸ்ரீசாய் ஜெய ஜெய சாய் நாம பஜனைக் குழுவினரால் பாடப்படும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement